தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்

Default Image

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கிவைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய வீட்டில் உள்ள நபர் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் மொத்தம் 13 கோடி 48 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைக்கவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்