வனத்துறையினரால் தாக்கப்பட்டு விவசாயி உயிர் பறிக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி தேவை!- மு.க.ஸ்டாலின்!

Default Image

தென்காசி அருகே வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவர், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்த நிலையில், கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.அதன்படி, அவரும் ஆஜராகினார்.

அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.

இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தநிலையில், தென்காசி அருகே வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அணைக்கரை முத்து மரண விவகாரத்தில் நீதிக்கான சட்டப்போராட்டத்தில் திமுக துணைநிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்