ராணுவ வீரர்களுக்காக 10,000 ராக்கிகள் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.!

Default Image

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் பெண் தொழில்முனைவோர்கள் தயாரித்த 10,000 ராக்கிகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ வீரர்களுக்காக வழங்ப்பட்டது.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள், ராக்கிகளை செய்துள்ளனர். அதில் முக்கியமானவைகளான, டெல்லியில் தயாரிக்கப்பட்ட மோடி ராக்கி, நாக்பூரில் தயாரிக்கப்பட்ட சணல் ராக்கி, ஜெய்ப்பூரில் செய்யப்பட்ட பெயிண்ட் ராக்கி, புனேவில் தயாரிக்கப்பட்ட விதை ராக்கி, சாட்னாவில் தயாரிக்கப்பட்ட கம்பளி ராக்கி, ஜாம்ஷெண்ட்பூரில் பழங்குடியின பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜார்கண்ட் ராக்கி ஆகியவை அடங்கும்.

மேலும், அசாமில் உள்ள டின்சுகியாவில் தயாரிக்கப்பட்ட தேயிலை இலைகள், கொல்கத்தாவில் தேயிலை இலைகளால் செய்யப்பட்ட ராக்கி, கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட பட்டு ராக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பொதுச்செயலாளர் பிரவீன் காண்டேல்வால் கூறுகையில், ‘ பல்வேறு மாநிலங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரால் தயாரிக்கப்பட்ட மில்லியன் கணக்கிலான ராக்கிகள்,  பலவேறு பகுதிகளில் உள்ள வர்த்தக சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படும்.’ என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்