வெங்கையா நாயுடு மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ரத்து!
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொடுப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு எம்.பி.க்களுக்கு புதன் கிழமை விருந்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் மாநிலங்களவை தொடர்ந்து 12-வது நாளாக முடங்கியது. இதையடுத்து விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.