Covid -19: ரேசன் கடை ஊழியர்களுக்கு கட்டாய பரிசோதனை!

Default Image
ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தற்போது கூட்டுறவு துறை சார்பில் அனைத்து மண்டல பதிவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற ரேஷன் கடைகளில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால், மற்ற பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பணியாற்றுபவர்கள் முகக்கவசம் கையுறை ஆகியவற்றை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த மண்டல பதிவாளருக்கு தமிழக அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்