பெரியார் சிலை திருடனைப் போல அனைவரும் உறங்கியபிறகு உடைப்பு!

Default Image

பெரியார் சிலையை உடைத்தவர்கள் திருடனைப் போல, அனைவரும் உறங்கியபிறகு அதை செய்துள்ளதாகவும், ஆண்மை இருந்தால், அவன் பகலில் இதை செய்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் சிலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில்  பெரியார் சிலையை உடைத்தவர்கள் திருடனைப் போல, அனைவரும் உறங்கியபிறகு அதை செய்துள்ளதாகவும், ஆண்மை இருந்தால், அவன் பகலில் இதை செய்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்