பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Default Image

பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், 19 வயது பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒருவாரத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், பணத்தை திருப்பி தரமுடியவில்லை.

இதனையடுத்து, அந்த பெண்ணை அழைத்த சிவக்குமார், மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.  மேலும், தனது நண்பர் ரவி என்பரையும் பாலியல் பலாத்காரம் செய்யச்சொல்லி, வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கில், ரவி இறந்து விட்டநிலையில்,  சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 13 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்