பரோல் விண்ணப்பம்.. வாரத்திற்குள் முடிவெடுக்க.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சேலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பரோல் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்கும்போது, பரோலில் விடுதலையில் செல்லும் கைதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும் காவல்துறையினர் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு நீதிபதி, கைதிகளிடம் பரோலில் பணம் வாங்கினால் அதுவும் லஞ்சம் தான் என கூறினர். இதுபோன்ற செயல்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியாக  மட்டுமின்றி, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடரவும் உத்தரவிடப்படும் என நீதிபதிகள் கூறினர்.

மேலும், பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்