செல்ஃபீ மோகத்தால் நடு ஆற்றில் விழுந்த இளம் பெண் – காப்பாற்றிய போலீசார்!

Default Image

செல்ஃபீ மோகத்தால் மத்திய தேசத்திலுள்ள  சிந்த்வாரா பகுதியில் உள்ள ஆற்று நீரில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்ற போலீசார் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர்.

தற்பொழுது வடக்கு மாநிலங்களில் மழை அதிக அளவு பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள  சிந்த்வாரா எனும் பென்ச் ஆற்றில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதனைப் பொருட்படுத்தாமல் பெஹ்ல்கெடி கிராமத்தில் உள்ள வாலிப வயதினர் சிறுவர்கள் அனைவரும் ஆற்றோரம் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்ஃபீ மோகத்தால் அங்கு இருந்து கொண்டு செல்பி எடுக்க தனது தோழியுடன் ஆற்றுக்குள் உள்ள பாறையின் மேல் சென்றுள்ளார். அப்பொழுது தான் தண்ணீர் திறந்து விட்டு ஓடிக்கொண்டிருந்தபடியால் பாறை மூழ்கும் அளவு  நீர்மட்டம் திடீரென உயர தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த கரையில் இருந்த மற்ற பெண்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளம்பெண்களையும் போலீசார் வந்து காப்பாற்றியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்