தோனிக்கு பிறகு CSK கேப்டன் யார் தெரியுமா..?

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன் என்று கூறியது ரசிகர்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தோனிக்கு பிறகு CSK அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த வகையில் ஒருவேளை சுரேஷ் ரெய்னா ஒரு ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக செயல்படலாம்.  ஓரளவு அனுபவம் கொண்ட தலைமைப் பண்பு கொண்ட இளம் வீரரையே CSK அணி நிர்வாகம் கேப்டனாக நியமிக்க விரும்பும் என்று கூறலாம்.

மேலும் அந்த வகையில் தோனிக்கு பின் தற்போது CSK அணியின் முக்கிய அனுபவ வீரர்களாக இருக்கும் சுரேஷ் ரெய்னா, பிராவோ, பாப் டுபிளெசிஸ் என யாருமே கேப்டனாக வர வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரும் தோனி ஓய்வு பெரும் போது 36 முதல் 38 வயதை அடைந்து இருப்பார்கள்.

இந்நிலையில் இவர்களைத் தாண்டி இளம் வீரர்களை பார்க்கும் போது அனுபவத்துடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆடக் கூடிய ஒருவர் CSKஅணியில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு பின் ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆக மிக மிக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்