சாத்தான்குளம் கொலை வழக்கு – கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா

Default Image

தந்தை மற்றும் மகன்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோர் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்டனர்.முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.இதனை தொடர்ந்து செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதன் பின் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.மேலும் அவரை விசாரணை செய்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Phil Salt & Tim David CATCH
Punjab Kings vs Chennai Super Kings
LPG Price Hike
MI vs RCB win
Rohit Sharma dismissed rcb