வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Default Image

வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிமுக அரசு கொரோனா மரணங்களை மறைப்பதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்? என பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உலகையே இன்னும் குழப்பும் கொரோனா சார்ந்த சந்தேக மரணங்களை தீர்மானிப்பதில் தரவுகளின் ஆய்வுகளை பின்பற்ற வேண்டியிருந்தது.

ICMRஐ ஆலோசித்து, தகுந்த வழிமுறைகளின்படி, வேறுபாடுகளை விசாரிக்க, முதல்வரே நிபுணர்குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார். அதில் வந்த முடிவுகளை ‌நமது அரசு சார்பில் நாமே அறிவித்துள்ளோம். எங்கேயோ காணாமல்போன அண்டாவை கண்டுபிடிக்கும் துப்பறிவாளர் மாதிரி, மேக்கப் எல்லாம் போட்டு, கையை காலை ஆட்டி, பின்னணி இசையோட நாடகபாணியில் வீடியோவில் வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்