#நந்தியின் தலை#வெளியே:1.5 ஆண்டு கழித்து அதியசம்!

Default Image

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், 1.5 ஆண்டுக்கு பின்னர், நந்தீஸ்வரரின் தலை வெளியே தெரியும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகி உள்ளது  .

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் அருள்மிகு சுவாமி ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது உள்ளது. அணையின் நீர்மட்டம், 69 அடிக்கு மேலே உயரும்போது கோவில் நந்தியின் சிலையானது மூழ்கி விடும்.

கடந்த ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை வெளியே தெரிந்தது. அதே போல் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில்  நீர்மட்டம் உயர்ந்ததால், சிலை மூழ்கியது.

இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தற்போது நீர் திறந்ததால் கடந்த மாதம் 12ந்தேதி 101 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 67.54 அடியாக சரிந்த நிலையில் பண்ணவாடி நீர்பரப்பில் மூழ்கி இருந்த நந்தி சிலையின் தலையானது நேற்று முழுமையாக வெளியே தெரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,352 கனஅடியாக இருந்த, அணையின் நீர்வரத்து,5,081 கனஅடியாக அதிகரித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்