சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு.. நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின்
நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமேன நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவு.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், வழக்கு குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற
மதுரை கிளை, சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின்
நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்