இமயமலையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி!ஆன்மிக பயணம் மிகச்சிறப்பு ….

Default Image

இமயமலையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் .

நடிகர்  ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று  சென்னை திரும்பியுள்ளார்.இந்நிலையில்  கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகிற 5 நாட்களுக்கு நடக்கிறது. இது முடிந்த பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ரஜினி விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.அதன் பிறகு திட்டமிட்டமிட்டபடி இம்மாத இறுதியில் உடல் பரிசோனைக்காக அமெரிக்கா செல்கிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க சிகிச்சை முடிந்து திரும்பியபோது மக்கள் கொடுத்த வரவேற்பு போன்று இந்த முறை ரஜினியை வரவேற்க பெரும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஏப்ரல் 14-ஆம்  தேதி தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

எனவே  இமயமலையிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி ஆன்மிக பயணம் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்