இன்று உயிரிழந்தவர்களில் கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் பாதிக்கப்பட்டு 69 பேர் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துளளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தோரில் 50 வயதிற்கு உட்பட்ட 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று தனியார் மருத்துவமனையில் 27 பேரும், அரசு மருத்துவமனையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,475 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்