#BIGNEWS ஐ.சி.சி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைப்பு.!

Default Image

ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன்காரணமாக மார்ச் மாதம் முதல் நடக்கவுள்ள அனைத்து விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது.

இதன்காரணமாக இந்தாண்டு இறுதியில் ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸ்  காரணமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இந்த போட்டிகள் நடைபெறவிருந்தது. ஆனால் உலகளவில் தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் காரணத்தினால், இந்த போட்டிகளை தள்ளிவைத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் எனவும் இறுதிப் போட்டி வருகின்ற 2021 நவம்பர் 14-ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu