சினிமாவில் அதுக்கு தான் நடிகைகளா! நடிகை வித்யாபாலன் பளீர்

Default Image

“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.

 

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. ஆனால் அதற்கேற்ற கதைகளும், கதாபாத்திரங்களும் அமைவது இல்லை. இன்றைய பெண்கள் குடும்ப வாழ்க்கையிலும், தொழில்களிலும் ஆண்களை விட அதிகமாக உழைக்கிறார்கள். ஆனாலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை

 

ஆனால் காலம் மாறிக்கொண்டு வருகிறது. சினிமா துறை என்பது கதாநாயகர்களுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. கதாநாயகிகளும் தனித்து சாதிக்கிறார்கள்.கதாநாயகர்கள் படங்களை போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். எனக்கு திருமணம் ஆனதும் இனிமேல் சினிமா அவ்வளவுதான். ரசிகர்கள் ஒதுக்கி விடுவார்கள் என்றார்கள். ஆனால் திருமணத்துக்கு பிறகு நான் நடித்த படங்கள் வெற்றியடைந்தது. திருமணத்துக்கு பிறகும் நடிகைகளால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்