வேகமாக நிரம்பும் அமராவதி அணை..!

Default Image

அமராவதி அணையில் நீர் 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 4,047 மில்லியன் கன அடி நீர் சேகரித்து வைத்து கொள்ள முடியும் மேலும் இதன் மூலம், கரூர், ஈரோடு மற்றும் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 57 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மேலும் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் அணை நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது,  மேலும் அமராவதி அணை நீர் மட்டம் ஒரு மாதத்தில், கிட்டத்தட்ட 26.94 அடியில் இருந்து.

இந்த நிலையில் தற்பொழுது 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது . இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர், இது குறித்து விவசாய்கள் கூறியது  பாலைவனம் போல காட்சியளிக்கும் அமராவதி ஆற்றில், தண்ணீர் திறந்து விடவும்  அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இதனால் பயன் பெறுவார்கள் என்றும்  கரூர் மாவட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்