தந்தை ,மகன் கொலை – போலீசாரை விசாரிக்கக்கோரி சிபிஐ மனு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை சிபிஐ விசாரணை நடத்தியது.விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. காவலர்கள் வெயிலுமுத்து,சாமதுரை, செல்லதுரை ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க  அனுமதிக்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.