குடோனில் தீ விபத்து …. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா 45 வயதான இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார், தான் விவசாயம் செய்யும் மலர்கள் மற்றும் காய்கறிகள் அனைதையும் சாகுபடி செய்து கேரளா மற்றும் கர்நாடகவிற்கு அனுப்பி வந்தார், இந்நிலையில் காய்கறிகள் மற்றும் மலர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் வைக்க ஒரு குடோன் ஒன்றை வைத்தார்.

இந்நிலையில் புதிய வீடு கட்டுவதற்கு தேவையான ஜன்னல் மற்றும்பல்வேறு மர பொருட்களையும் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது, இதனால் கிருஷ்ணப்பா காவல்துறையில் தகவல் கூறியுள்ளார், இதனால் காவல்துறையினர் தீ விபத்து எப்படி நடந்தது என்று குறித்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்