சிறுமியை பாலியல் வன்கொடுமை..போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட பேருந்து.!

Default Image

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள உத்தரா தினாஜ்பூர் என்ற மாவட்டத்தில் கலகாச்சில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதைதொடர்ந்து, அந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் வாகனங்கள் மற்றும் பொது பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

பின்னர், பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்தனர்.  இது மிகவும் சோகமான சம்பவம். விசாரணை மேற்கொள்ளப்படும் மற்றும் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மேற்கு வங்க அமைச்சர் Goutam De கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்