ரூ.10 கோடி நேஷனல் ஹெரால்டு வழக்கில் செலுத்த வருமான வரித்துறை உத்தரவு!
டெல்லி உயர்நீதிமன்றம் , நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் 10 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திர போராட்ட காலத்தில் நிறுவப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 2008ம் ஆண்டு முதல் கடன்சுமை காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளை யங் இந்தியா நிறுவனத்தின் மூலம் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர் முறைகேடாக பெற்றதாகக் கூறி, சுப்பிரமணியன்சுவாமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறை 249 கோடியே 15 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த யங் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து யங் இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்நீதிமன்றம் 10 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட்டாக செலுத்த உத்தரவிட்டது. 10 கோடி ரூபாய் செலுத்துவதைப் பொறுத்து 249 கோடியே 15 லட்ச ரூபாய் ரூபாய் வரியை செலுத்த வருமான வரித்துறை வற்புறுத்தாது என நீதிபதிகள் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.