சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்!

சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்.

கடலூர் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டே அரசு தடை விதித்திருந்த நிலையில், சில இடங்களில் இந்த வலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டையில், 32 கிராம மீனவர்கள் இணைந்து இந்த வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வலையை பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான படகுகளில் கருப்பு கோடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்த இடத்திற்கு 5,00 போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.