தட்டிக்கேட்ட பெண்ணை கம்பியால் தாக்கிய இளைஞர் கைது.!

Default Image

தட்டிக்கேட்ட பெண்ணை கம்பியால் தாக்கிய இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வந்தவர் குமார் இவர் ஊரடங்கு காரணமாக தனது நண்பர்களுடன் வீட்டிற்கு பக்கத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர், அப்பொழுது வேணு மென்றே அருகில் உள்ள குடுசையின் மீது பந்தை அடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்அதே பகுதியில் வசித்து வந்தவர் ஜெயா. மேலும் குமார் பந்து அடுக்கும் பொழுது ஜெயா மீது விழுந்துள்ளது இதானால் பார்த்து விளையாடவேண்டிதானே என்று குமாரிடம் ஜெயா கூறியுள்ளார்.

ஆனால் குமார் நான் அப்டித்தான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் இதனால் இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் கோபமடைந்த குமார் வேகமாக தனது வீட்டிற்கு சென்று பெரிய கம்பி ஒன்றை எடுத்து வந்து ஜெயாவை பயங்கரமாக தாக்கியுள்ளார். அப்பொழுது வலிதாங்கமுடியாமல் ஜெயா கத்தியுள்ளார்.

மேலும் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்துள்ளனர் கம்பியை வைத்து தாக்கிய குமார் மீண்டும் என்னிடம் சண்டை வைத்து கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் கொடுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஜெயா தரப்பில் போலீசில் புகார் அளிப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்