மறுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு.! ஹால் டிக்கெட் பெற இன்றே கடைசிநாள் .!

Default Image

மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை பெற இன்றே கடைசி நாள்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள்  ஜூலை 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

மாணவர்கள் தேர்வு எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை  மாணவர்கள்  ஜூலை 13 முதல் ஜூலை 17-ஆம் தேதிகளில் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து  பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹால் டிக்கெட்டை பெற இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் இன்றைக்குள் தங்களது ஹால் டிக்கெட்டை பெற்று கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்