தந்தை-மகன் கொலை வழக்கு: சிறைக்காவலர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை!

Default Image

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறைக்காவலர்கள் வேல்முருகன், செந்தூர் ராஜா, மாரிமுத்து ஆகியோரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை.

கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வருகிறது.

நேற்று கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ் மற்றும் வெண்ணிலாவை ஆஜராக சம்மன் அளித்துள்ளது. அதன்படி, மருத்துவர் வெண்ணிலா, மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள்

மேலும் இந்த வழக்கில், சிறைக்காவலர்கள் வேல்முருகன், செந்தூர் ராஜா, மாரிமுத்து ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருவதாக மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்