தந்தை-மகன் கொலை வழக்கு.. மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன்!

Default Image

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சிறைக்கைதி, சிறை கண்காணிப்பாளர் உட்பட மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான எஸ்.ஐ. ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ் மற்றும் வெண்ணிலாவை ஆஜராக சம்மன் அளித்துள்ளது. அதன்படி, மருத்துவர் வெண்ணிலா, மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜரானார்.

இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங், சிறை கண்காணிப்பாளர் சங்கர், மருத்துவர் வினிலா ஆகிய மூன்று பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் அழைத்து வந்தபோது அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததாக கைதி ராஜாசிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பிரண்ட்ஸ் ஆப் போலீசும் ஜெயராஜ் மற்றும் பென்னிஸ்-ஐ அடித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்