காதலன் கிடைக்காததால் விஷம் குடித்து காதலி உயிரிழப்பு..!

Default Image

கெங்கவல்லி அருகே ஆனையம்பட்டி கிராமத்தில் காதலன் கிடைக்காததால் விஷம் குடித்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா 25 வயதான இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய கணவரை விவாகரத்து செய்து தனது பெற்றோருடன் அனிதா வசித்து வந்தார் , இந்த நிலையில் டெல்லியில் உள்ள டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றபோது அங்கு வந்துள்ள விக்னேஷ் சென்ற 27 வயதான இளைஞர் மற்றும் அனிதாவுக்கு இடையே காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் காதலன் விக்னேஷ் தனது பெற்றோர் மூலம் அனிதாவை திருமணம் முடிக்க அனிதாவின் கூறியுள்ளார் ஆனால் கடந்த சில நாட்களாகவே திடீரென்று அவளிடமிருந்து விலகினார், விக்னேஷ் சிறிது காலமாக பேசாமல் இருந்த நிலையில் அனிதா விக்னேஷ் வீட்டிற்கே நேரடியாக சென்றுள்ளார் அப்பொழுது விக்னேஷின் பெற்றோர் விக்னேஷை வீட்டில் மறைத்து வைத்துக்கொண்டு இல்லை என்று கூறியதால் ஆத்திரம் அடைந்துள்ளார் .

மேலும் இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் காதலை சேர்த்து வைக்க கோரி புகார் அளித்துள்ளார் , ஆனால் போலீசார் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனிதா கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் காதலன் விக்னேஷ் சிவன் வீட்டிற்கு கையில் விஷம் பாட்டிலுடன் சென்றுள்ளார்.

அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார் அப்பொழுது திடீரென கையில் கொண்டு வந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அனிதா சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காதலன் விக்னேஷை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்