தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் 65 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2099 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 14 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி, சென்னையை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் சிவகங்கையை சேர்ந்த 13 வயது சிறுமி உட்பட இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமில்லாமல்,பிற நோயினால் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  கொரோனா நோயால் மட்டும் பாதிக்கப்பட்டு 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.