8 போலீசாரை துப்பாக்கியால் சுட்டும், ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்த ரவுடிகள்.! பிரேத பரிசோதனையில் அம்பலம்.!

Default Image

சமீபத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடன் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரசாந்த் குமார், கடந்த ஜூலை 3-ஆம் தேதி பிக்ரு கிராமத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் போலீஸ்காரர்களின் ஆயுதங்களையும் கொள்ளையடித்தனர் எனவும், இந்த வழக்கில் மொத்தம் 21 குற்றவாளிகள் உள்ளனர்.

அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விகாஸ் துபே உட்பட 6 குற்றவாளிகள் பல்வேறு சம்பவங்களில் போது சுட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கான்பூரில் 8 போலீசாரை ரவுடிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதுடன், ஆயுதங்களாலும் தாக்கி கொடூரமாக கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.

மேலும், பிக்ரு கிராமத்தில் உள்ள விகாஸ் துபே இல்லத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்தனர். விகாஸ் துபேயின் இல்லத்தில் தேடியபோது, கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்