கடலில் அலை சறுக்கும் போது..சுறா கடித்து உயிரிழந்த சிறுவன்.!

Default Image

ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சுறா தாக்குதலில் ஒரு 17 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று போலிஸ் தெரிவித்தன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி கிழக்கு கடற்கரையில் அலை சறுக்கும்பொழுது ஒரு சுறா தாக்குதலால் ஒரு இளம் சிறுவன் உயிரிழந்தார் என போலிசார் இன்று கூறியது இதனால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளது.

17 வயதான சிறுவன் பிரிஸ்பேனுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் உள்ள கோஃப்ஸ் துறைமுகத்திற்கு அருகே அலை சறுக்கு செய்யும் பொழுது தாக்கப்பட்டதாக சாட்சிகளை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர்.

பல அலை சறுக்கு வீரர்கள் அந்த சிறுவனை கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று தெரிவாக்கப்பட்டுள்ளது. ஆனால்  சிறுவனின் பெயர் மற்றும் ஊர் பற்றி வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து  அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி வருகின்றதாகவும். மனிதர்களுடன் இந்த சுறா தாக்கல் என்பது ஆஸ்திரேலியா பெயர் பெற்றது. இன்று  நடந்த தாக்குதல் 2020 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டின் 10 ஆவது தாக்குதலாகும் என்று “Taronga Conservation Society” வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்