”பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” நவாஸ் ஷெரீப் அதிரடி

 ‘பனாமா கேட்’ மோசடி தொடர்பான ஊழல் வழக்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக, பதிவு செய்ய வேண்டும் என, கூட்டு விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, ‘நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், ”பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. என்னை தேர்வு செய்தது மக்கள் தான்; எதிர்க்கட்சிகள் இல்லை,” என, நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து  எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று ஆலோசித்து கொண்டு இருகின்றனர்…

author avatar
Castro Murugan

Leave a Comment