#BREAKING : ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 13 முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்போது சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில்  தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 13 முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு .நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.