கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Default Image

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வசித்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா   ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கு அங்குள்ள எய்ம்ஸ் மையத்தில்  கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து  உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள்  கூறுகையில், மருத்துவமனை வார்டில் இருந்து அவர் வெளியே  ஓடியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு பின்னாக ஓடி தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் குதித்து விட்டதாக  தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்