ஸ்பானிஷ் ப்ளூ, கொரோனா இரண்டிலும் இருந்து தப்பிய 106 வயது முதியவர்

Default Image

கடந்த 1918-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு 4 கோடி பேர் உயிரிழந்தனர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி கூறப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பில் உலக பாதிப்பில் 5-ல் ஒரு பங்கு இந்தியா மக்கள் என கூறப்படுகிறது. 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பாதிப்புக்கு உலகில் 3-ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து உள்ளது. அதிலும், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து, டெல்லியை சார்ந்த 106 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இவரது 70 வயது மகனுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால்,கொரோனா மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு தற்போது இருவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஸ்பானிஷ் ப்ளூ நோய் ஏற்படும்பொழுது இந்த முதியவருக்கு 4 வயது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை விட வெகுவிரைவில் குணமடைந்தது அனைவரும் மத்தியில் ஆச்சரியதை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்