ஜில் நியூஸ்- தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கடலூர் ,விழுப்புரம் ,தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை, மற்றும் நாமக்கல், சேலம் ,ஈரோடு, தர்மபுரி ,வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 5இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மேலும் தென்மேற்கு மத்தியஅரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்