சாத்தான்குளம் விவகாரம்.! எச்சரிக்கும் சென்னை காவல்துறை.!

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதற்கு அரசியல் கட்சியினர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள்  என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்புப்படுத்தி வேறு வீடியோக்களை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ சாத்தான்குளத்தில் நடந்தது அல்ல, கடந்த 2019-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் அருகே நடந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தொடர்புபடுத்தி தவறான தகவல் பரவுகிறது.

இந்த வீடியோவை பரப்பியவரை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்