குழந்தை பெற இயலாத பெண்! கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை!

Default Image

கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை.

ஹைதராபாத் நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தின் ரல்லாகுவாவில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ்வர் ராவ் என்ற பைலட்டை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், லாவண்யாவின் மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப்பட்டார். கணவரின் துன்புறுத்தலை தாங்க இயலாமல், லாவண்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, இவரது குடும்பத்தினர்   சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டனர்.

அந்த காட்சியில், வெங்கடேஸ்வர ராவ், லாவண்யாவை மீண்டும் மீண்டும் தாக்குகிறார். இதனை பார்த்த அவர்களது செல்ல நாய் அதனை தடுக்க முயற்சி செய்கிறது. வெங்கடேஸ்வர் ராவ் அவளை அடிப்பதை நிறுத்திய பிறகு, காயமடைந்த லாவண்யா எழுந்து வலியால், வயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்கிறார்.

இதனை தொடர்ந்து லாவண்யா தனது இல்லத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வாழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்