போலீசாரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி..!

போலீசாரை எட்டி உதைத்த  முன்னாள் எம்.பி அர்ஜுனன்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் சில மாவட்டங்களில், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி அர்ஜுனன், தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர், அவரின் காரை தடுத்து நிறுத்திய நிலையில், ஆவணங்களை கேட்டுள்ளனர். இதனையடுத்து, முன்னாள் எம்பி அர்ஜுனன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், போலீசாரை காலால் எட்டி உதைத்துள்ளார்.