12-ம் வகுப்பு தேர்வு முடிவு.! முதல்வர் – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.!

Default Image

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டாதால் 36,000 மாணவர்களால் பொதுத்தேர்வு எழுத முடியவில்லை. அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 10-ம் தேதியுடன் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஜூலை மாதம்  முதல் வாரத்தில் முடிவு வெளியாகலாம் என கூறிய நிலையில் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்