லடாக்கில் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நிறுத்திய இந்தியா.!

Default Image

கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் பிரச்சினையாக உள்ளது. கடந்த 15-ம் தேதி லடாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடந்து, லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால், பேச்சு வார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை, தொடர்ந்து சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.  இந்நிலையில், லடாக் அருகே இருக்கும் சீனாவின் ஹோட்டான் விமான படைத்தளத்தில் இந்த வாரம் மட்டும் 27 சுகோய் விமானங்களை சீனா களமிறக்கி உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், சீனப் படைகளின் சுகோய் -30 போன்ற கனரக விமானங்களை இந்திய எல்லைக்கு அருகே பறக்கின்றன. உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) சீனா தனது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது இந்தியா கிழக்கு லடாக்கில் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை நிறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்