சிறுவன் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர் கொன்ற பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது..!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில்இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 6 வயது சிறுவன் உட்பட ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று 6 வயது சிறுவன் மற்றும் சிஆர்பிஎஃப் கொலை செய்த பயங்கரவாதியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த பயங்கரவாதி ஜே.கே.ஐ.எஸ் அமைப்பின் ஜாஹித் தாஸ் என்பவர் தெரியவந்துள்ளது. அவர் மீது காஷ்மீர் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025