அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு – டாஸ்மாக் நிர்வாகம்

Default Image

தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில்,விளக்கம் அளிக்கப்பட்டது.அதில், கடந்த ஓராண்டில்  தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மதுபான விலை விவரங்கள் அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது .இறுதியாக நீதிமன்றம் வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்