இன்றைய நாள் (26.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும். செய்யும் செயலில் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்று உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் வரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையாது. முயற்சிகள் அதிகமாக எடுக்க வேண்டும். தெளிவின்றி காணப்படுவீர்கள். தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம்.

சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு மன ஆறுதலை தரும். பிரார்த்தனை செய்யவேண்டும். தியானம் உங்களுக்கு உற்சாகத்தை தரும்.

கன்னி : நீங்கள் பொறுமையை கையாள வேண்டிய நாள். சொந்தபந்தகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள்.

துலாம் : இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள். விரைந்து செயலாற்றுவீர்கள். மன உறுதியும் தைரியமும் உங்களிடத்தில் காணப்படும். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களை விரைந்து செயலாற்றுவீர்கள். நட்பு வட்டாரத்தில் நல்ல உறவு கிடைக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பொறுமையை கையாள வேண்டிய நான். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு ஏதுவாக இருக்காது. நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்விற்கு பயனுள்ளதாக அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் : வெற்றிகள் கிடைக்கும் நாள். நீங்கள் தைரியமுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.