டிடிவி தினகரன் திராவிடத்தை மறந்து சர்வாதிகாரியாக செயல்படுகிறார்!
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் டிடிவி தினகரன் திராவிடத்தையும் திராவிட தலைவர்களையும் மறந்து சர்வாதிகாரியாக செயல்படுவதாக கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் சின்னங்குடியில் புதிதாக மீன் இறங்குதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகியுள்ள நாஞ்சில் சம்பத்திற்கு காலம் கடந்து ஞானோதயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.