சிஎஸ்பிசி பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை! 454 காலியிடங்கள்!

Default Image

சிஎஸ்பிசி பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை.

பீகார் மத்திய தேர்வு வாரியம், பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு  ஆட்கள் சேர்க்கும் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அதன் இணைய பாக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 24, 2020 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் காலம் தொடங்கியவுடன், ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 ஜூலை 24 அல்லது அதற்கு முன்னர் csbc.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பீகார் போலீஸ் ஸ்வாபிமான் பட்டாலியனுக்கான  பெண் கான்ஸ்டபிள்களின் 454 காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படுகின்றன. இந்த வேலைக்கு பதிவு செய்யும் பெண்கள், 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் வயது  18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 155 செ.மீ இருக்க வேண்டும்.

தேர்வு வழிமுறைகள்

  • எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும், இதற்கான பாடத்திட்டத்தை சி.எஸ்.பி.சி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
  • 30% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் உடல் திறன் சோதனைக்கு ஆஜராக வேண்டும்.
  • மேலும் விபரங்களுக்கு சி.எஸ்.பி.சி யின் அதிகாரபூர்வ இணையத்தில் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்