தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Default Image

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர், ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ் .31 வயதான பென்னிக்ஸ் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். போலீசார் விதிமுறைகளை மீறி கடை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் சிறையில் இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று முழு கடையடைப்பு  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்  தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.இதற்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் சுந்தரேஷ் பதிவு துறைக்கு கடிதம் அளித்தால் நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்