தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Default Image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங் களான கோவை, தேனி மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், பெய்யும் என்றும், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும்  என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் சில பகுதியில் மிதமான மழைப்பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகலில் மணிக்கு 45 ல் இருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிதுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்