புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Default Image

புல்வாமாவில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி துணை ராணுவ படை வீரர்கள் சென்றனர்.

இதனை அறிந்த தீவிரவாதிகள், அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு தீவிரவாதிகள சுட்டுக் கொன்றனர். மேலும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்